எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி மிரட்டல் விடுத்திருப்பதையொட்டி பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சிவசேனாவுக்கு கடும் போட்டியாக பாரதிய ஜனதா களம் இறங்கியுள்ளது. அதனால் முதல்வர் தேவேந்தரா பட்னாவிஸ் தலைமையில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி அரசில் மோதல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவை எதிர்த்து பாரதிய ஜனதா கடும் போட்டியில் இறங்கி இருப்பதால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது. எங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர் உத்தரவு பிறப்பித்தால் உடனே அமைச்சரவையில் உள்ள அனைத்து சிவசேனா அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிடுவோம். அப்படி ராஜினாமா செய்யும் பட்சத்தில் பாரதிய ஜனதா அரசு மெஜாரிட்டியை இழந்து கவிழ்ந்துவிடும் என்று சிவசேனா செய்தி தொடர்பாளர் மணிஷா கயாண்டி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். மும்பை மாநகராட்சி செயல்பாடு சரியில்லை என்றும் கூறும் பாரதிய ஜனதா, மாநிலத்தில் ஏன் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியின் பலன்களை அனுபவிப்பதற்காகவா என்றும் கயாண்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேபினட் கூட்டம்:
அமைச்சரவை கூட்டத்தில் எங்களை எதுவும் சொல்லவிடுவதில்லை. அமைச்சரவை கூட்டமும் வெளிப்படையாக இருப்பதில்லை. பாரதிய ஜனதா அரசு தனது எதேச்சதிகார போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறது. அதனால் எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேயின் கட்டளைக்காக காத்திருக்கிறோம். அவர் கட்டளையிட்ட மறு வினாடியே சிவசேனா அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிடுவோம் என்றும் கயாண்டி தெரிவித்தார்.
மக்கள் வெறுப்பு:
பாரதிய ஜனதா அரசு மீது மகாராஷ்டிரா மக்கள் வெறுப்படைந்துள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் எதையும் அரசு செயல்படுத்தவில்லை. எங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை கட்சியிலும் அரசிலும் சேர்த்துள்ளனர். அதனால் மக்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். எங்கள் தலைவர் உத்தவஜி மீது முதல்வர் பட்னாவிஸ் தவறான வார்த்தைகளால் வசை பாடிவருகிறார். ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உத்தவ்ஜி மீது பட்னாவிஸ் கூறுகிறார் என்றும் கயாண்டி மேலும் கூறினார்.
இந்தநிலையில் பாரதிய ஜனதாவுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் வாங்க தயாரா? என்று சிவசேனா கட்சிக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. மாநிலத்தில் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. இதனால் சிவசேனா ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டால் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு 125 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது தொடா்பான 20 அம்ச ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
29 Dec 2025நியூயார்க், அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன்
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 128 விமானங்கள் ரத்து
29 Dec 2025டெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: உடனே கட்டுக்குள் கொண்டு வர அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
29 Dec 2025சென்னை, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



