முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 17 நபர்களுக்கு நேரடி உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று(13.02.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 390 மனுக்கள் வரப்பெற்றன.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான போட்டித்தேர்வில் தேர்வு பெற்ற 17 நபர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளையும், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் பதிவு செய்திருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், சிறுமொளசி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இறந்ததை முன்னிட்டு அவரது வாரிசுதாரரான அவரது மகன் எம்.விஜயகுமார் என்பவருக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் விபத்து நிவாரண நிதியுதவி மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.5,02,000 க்கான காசோலையினையும், நாமக்கல்; சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலகத்தின் சார்பில் கொசவம்பட்டியைச் சேர்ந்த உமா என்ற முதியோருக்கு மாதம் ரூ.1000 வீதம் ரூ.12,000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் சாலை விபத்தில் மரணமடைந்த மணிகண்டன் என்பவரின் தாயார் கண்ணம்மாள் என்பவருக்கு ரூ.1.00 இலட்சம் விபத்து நிவாரண நிதியுதவிக்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 5 மகளிருக்கு ரூ.16,300 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 13 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.1,50,000 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.375 மதிப்பிலான கருப்புக்கண்ணாடி மற்றும் மடக்கு குச்சியினையும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 பயனாளிகளுக்கு ரூ.7,80,675 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பணிநியமன ஆணைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, தொழிலாளர் ஆய்வாளர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சி.மஞ்சள்நாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்