எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்று திரட்ட ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். ஜெயலலிதாவால் ஏற்கனவே 2 முறை முதல்- அமைச்சராக அடையாளம் காட்டப்பட்டவரான ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பிடித்தார்.அடுத்த கட்டமாக முதல்-அமைச்சர் பதவிக்கு சசிகலா குறிவைத்து காய் நகர்த்தினார். அதற்கேற்ப அ.தி.மு.க. சட்டமன்ற தலைவராகவும், சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனது முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம், 2 நாட்கள் கழித்து சசிகலா தரப்பினரால் மிரட்டி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என்று கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பின்னரே அரசியல் களம் சூடுபிடித்தது. இதன்பின்னரே அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என 2 அணிகள் உருவானது.ஓ.பன்னீர்செல்வத்துக்கு மா.பாண்டியராஜன், உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்தனர். பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் தினமும் அவரது வீடு முன்பு கூடினர்.
மேலும் பல அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அதற்காகவே காத்திருந்தனர். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.கூவத்தூர் விடுதியில் தங்கி இருந்த பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கவர்னரின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இது ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், தனது அடுத்தகட்ட நடவடிக்கையை புதிய வியூகமாக வகுத்து செயல்பட தொடங்கியுள்ளார். முதல்- அமைச்சர் பதவி பறிபோன நிலையில் நேற்று முன் தீனம் இரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சென்று அஞ்சலி செலுத்தி வணங்கிய ஓ.பன்னீர் செல்வம், எங்களது தர்ம யுத்தம் தொடரும். அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும், ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்போம் என்று தெரிவித்தார். 125 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. 7½ கோடி மக்களின் ஆதரவு எங்களுக்கே இருக்கிறது என்று கூறியுள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.எதிர் அணியில் இருக்கும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் நிலை பற்றி அப்போது மக்களிடம் அவர் எடுத்துக் கூறுகிறார். தனக்கு ஆதரவு அளிக்காத 125 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கும் சென்று அவர் மக்களை சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் போது, அ.தி.மு.க.வினர் அனைவரையும் ஒன்று திரட்ட ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் எதிர்காலத்தில் அ.தி.மு.க.வினர் அனைவரையும் தனது தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையும் வியூகமும் சசிகலா ஆதரவு முன்னணி நிர்வாகிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.