முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 427 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நேற்று (20.02.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 427 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

குறைதீர் கூட்டம்

 

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (20.02.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.

மாற்றுத்திறனாளிக்களுக்கான உதவித் தொகை, விதவை உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 09 நபர்களுக்கு உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

பெட்டவாய்த்தலை, சிறுகமணியைச் சேர்ந்த கே.தங்கராஜின் மகன் த.ரவீந்திரனுக்கு(30) சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு இடது சிறுநீரகத்தை அகற்றும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. அவரின் மருத்துவ செலவிற்காக நிதியுதவியாக ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

திருவரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை கிராமத்தை சேர்ந்த முகமது ஆசிப் என்பவரின் மகள் மாணவி அனிசா தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழுவினரால் மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது சேலம் அண்ணபூர்ணா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். அவருக்கு கல்வி உதவித்தொகையாக மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 72 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 59 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 52 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 15 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 30 மனுக்களும், புகார் தொடர்பான 29 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 12 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 15 மனுக்களும் மற்றும் 143 இதர மனுக்கள் என மொத்தம் 427 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்