முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே14–ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, உள்ளாட்சி தேர்தலை வரும் மே14–ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கும் படியும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐகோர்ட்டில் மனு விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இவ்வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்? என நீதிபதிகள் கேட்டனர்.மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மே 15–ம் தேதிக்குள் நடத்த உத்தேசிக்கிறோம் என்றார்.இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது. நேற்று விசாரணைக்கு வந்த போது, மே15–க்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15–ம் தேதிக்குள் துவங்கி மே14–க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே 14–ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்