முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேந்தமங்கலம் தொகுதியில் 332 மகளிருக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் சி.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., வழங்கினார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      நாமக்கல்

இராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேரகன் 332 மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பிலான பல்வேறு தொழில் துவங்க கடனுதவிகளை வழங்கினார்.  இதனை தொடர்ந்து பூக்கடை, கூடை முனைதல், அரிசி விற்பனை, சிறு வணிக கடைகள், ஆடு வளர்ப்பு போன்றவைகளுக்கு காசோலை மூலம் கடன் தலா ரூ.50 வரையிலான கடன்கள் வழங்கப்பட்டன. இதனை பெற்றுக் கொண்ட பெண்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும்  வழியில் செயல்படும் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்