முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்.

சிதம்பரம் அரசினர் நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2016-17 ஆம் கல்வி ஆண்டில் +1 பயிலும் மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கிவைத்தார்.நிகழ்ச்சிக்கு நந்தனார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு 154 மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சொ.ஜவகர், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, ஒன்றிய கழக அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி, கோவி.ராசாங்கம், மு.மாவட்ட குழு உறுப்பினர் கர்ணா, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் முருகையன், மாணவரணி பொருளாளர் சங்கர், நிர்வாகிகள் கார்த்திகேயன், ஜி.வைத்தியநாதன், முத்துக்குமரன், கருனாநிதி, இளஞ்செழியன், ஜெ.கே.முத்து, கனேஷ், ரமேஷ், அருள், விஜய், சுதாகர், தெய்வீகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்