முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எத்தனை துரோகிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்   ஒன்றிய கழகத்தின் சார்பில் மேட்டுப்பட்டியில்  நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், எத்தனை துரோகிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது,வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க 100சதவீதம் வெற்றி பெறுவது நிச்சயம் என்று பேசினார்.

அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்:

அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆலோசனைப்படி,கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் ஒன்றிய கழக அ.தி.மு.க சார்பில் மேட்டுப்பட்டி கிராமத்தில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெகுசிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அ.அன்பழகன்  தலைமை வகித்தார்.ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,அவை தலைவர் அன்னக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளைகழக செயலாளர் திருப்பதி,பி.ஆர்.சி.கிளை பொருளாளர் கல்யாணி,ஊராட்சி கழக செயலாளர்கள் ராமர்,பால்ராஜ் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார்,தலைமை கழக பேச்சாளர் பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு:

அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பிறந்த நாளை தியாகத் திருநாளாக நாம் கடைபிடித்து வருகிறோம். தமிழகத்திலுள்ள தாய்மார்களின் சுமைகளை குறைப்பதற்காக 1.85கோடி குடும்பங்களுக்கு விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்களை வாரி வழங்கி வரலாற்றில் இடம் பிடித்தவர் அம்மா மட்டும் தான்.உலகிலே முதல் முறையாக தாலிக்கு தங்கம் வழங்கி,மாணவ சமுதாயத்திற்கு மடிகணிணி வழங்கி,முதியோர் உதவித் தொகையை உயர்த்தி வழங்கி யது உட்பட பல்வேறு சாதனைகளை அம்மா படைத்ததால் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்திட வெற்றியை பரிசாக மக்கள் வழங்கியுள்ளனர்.அம்மாவை இழந்து நாம் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்மை அழிக்க நினைத்திடும் தீயசக்தி கருணாநிதியுடன் கைகோர்த்துக் கொண்டு கட்சியின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் தான் தி.மு.க.வின் கைகூலியான பன்னீர்செல்வத்தை அம்மாவின் ஆன்மா நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்;டது.தற்போது அவர்கள் கோயபல்ஸ் பொய்பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.குடும்ப ஆட்சியை பற்றி பேசியட தி.மு.க.விற்கும்,ஓபிஎஸ்சுக்கும் தகுதியில்லை.பதவி வெறிக்காக அ.தி.மு.க.வை காட்டிக்கொடுத்தவர்களை புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவியின் ஆன்மா மன்னிக்காது.

சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் அதுஒரு ரவுடிக்கட்சி என்பதை வெட்டவெளிச்சமாக மக்களிடம் காட்டிவிட்டது.தமிழகம் தற்போது அமைதிப்பூங்காவாக மாறிவிட்டது.ஆனால் அரசு பங்களாவில் அமர்ந்து கொண்டு ஓபிஎஸ் அரசியல் நடத்தி வருகிறார்.ஓபிஎஸ்சின் தற்போதைய பதவிவெறி நடவடிக்கைகள் அவருக்கு மனநிலை பாதித்திருப்பது போல் தோன்றுகிறது.அம்மா நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து தமிழகத்தை நாட்டின்முதன்மை மாநிலமாக மாற்றி காட்டினார்.தற்போது சின்னம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பதவியேற்றவுடன் 5முத்தான திட்டங்களில் கையெழுத்திட்டு மக்கள் நலப்பணிகளை தொடங்கியுள்ளார்.உண்மையிலே ஓபிஎஸ்;சிற்கு தைரியம் இருந்தால் சென்னையை விட்டு வெளியேறி தேனி மாவட்டத்தில் வந்து அரசியல் நடத்தட்டும்.தேனி மாவட்டத்திற்கு ஓபிஎஸ் வந்தால் அவரை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.விரைவில் அம்மா அரசின் மக்கள் நலத்திட்டங்கள் காட்டாற்று வெள்ளம் போல் வரவுள்ளது.வரும் உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க 100சதவீதம் வெற்றி பெறுவது நிச்சயம்.எத்தனை துரோகிகள்,எதிரிகள் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று பேசினார்.இதை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி,சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்:

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்செல்வம்,திருப்பதி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் முருகேசன்,தவமணி,ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,சரஸ்வதிகந்தன்,இணை செயலாளர் சுமதிசாமிநாதன்,ஒன்றிய சார்புஅணி நிர்வாகிகள் சிவன்காளை,சிவா, வெல்டிங்முருகன்,ஆறுமுகம்,முத்துராஜா,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வளர்மதி அன்பழகன்,உச்சப்பட்டி செல்வம்,பழனிச்சாமி,சிவஜோதிதர்மர்,முனியாண்டி,கள்ளிக்குடி அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா,கூட்டுறவு சங்க தலைவர்கள் கபிகாசிமாயன்,சுகுமார்,கோடீஸ்வரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாமிநாதன்,செல்வி பரமசிவம்,துரைராஜ்,வெங்கடேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் ஒன்றிய இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்