முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி, . தலைமையில் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை  விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி .  தலைமையில்  நடைபெற்றது.

                 இக்கூட்டத்தில்,  இந்திய அரசிதழில் 2016 ஏபரல் மாதத்தில் வெளியிடப்பட்ட உத்தரவின் அடிப்படையில்  வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவி வழங்குவதில் எவ்வித கால தாமதமும் ஏற்படக் கூடாது என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார். மேலும், ஏற்கனவே நிலுவையில் வைக்கப்பட்டிருந்த நான்கு வழக்குகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தின் முடியில் அனைத்து வழக்குகளும் புகார் சங்கதிகளை பொருத்தமட்டில் உண்மைக்கு புறம்பான வழக்குகள் என முடிவு செய்யப்பட்டது.

                 இதனைத்தொடர்ந்து, மாவட்ட கொத்தடிமைகள் கண்காணிப்புக்கூட்டம்  மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கொத்தடிமைகள் பணிபுரிவதாக புகார்கள் ஏதும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை இருப்பினும் தேவை ஏற்படின் வருவாய் கோட்டாட்சியர்கள் காவல்துணை கண்காணிப்பாளர்களுடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்திலுள்ள நூற்பாலைகள் மற்றும் தொழில்நிறுவனங்களில்  திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்.

                முன்னதாக, மனித கழிவுகளை  அகற்றும்  தொழில் செய்வோரை தடுக்கவும், மறுவாழ்வு அளிக்கும் செயல்படும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கலெக்டர்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக உள்ளது. அந்த நிலை தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கழிப்பிடம்  என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு செய்யும் எனவும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை திருப்பூர் மாவட்டத்தில் இல்லை எனவும்  மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார். 

               இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காமாட்சிதாசன், உதவி கலெக்டர் தாராபுரம் கிரேஸ் பச்சாவு  அரசு சிறப்பு வழக்கறிஞர் ரூபன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், மாவட்ட கண்காணிப்பு  மற்றும் விழிப்பு குழு உறுப்பினர்கள்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்