எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் பேசியதாவது.தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தமத்தினர், பார்சிகள்,(nஐhராஷ்ரியர்கள்) மற்றும் சமண மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மதவழி சிறுபான்மையினத்தவராக கருதப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை, சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான பொதுப்பரிசுகள் வழங்கும் திட்டம், மாநில அளவிலான உருது மொழிப்பரிசுகள் திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல திட்டம் இத்திட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை 1412 பேர் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் இதுவரையில் 299 பயனாளிகளுக்கு ரூ5.08 இலட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் திட்டங்கள், சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு மிகக்குறைந்த வட்டிவித்தில் பல்வேறு கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் வேலூர் மாவட்டத்தில் 483 பயனாளிகளுக்கு ரூ.205.48 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு மூலம்; சிறுபான்மையினர் நலனுக்காக 15 அம்ச நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போல தமிழக அரசும் இந்திய அரசும் சிறுபான்மையின மக்களுக்காக தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள நலவாரிய உறுப்பினர்கள் தங்களுடைய ஆலோசனைகளையும் குறைகளையும் தெரிவித்தால் அவற்றை தீர்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரைத்து உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் கூட்டத்தில் பேசினார்.மேலும் கூட்டத்தில் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி திட்டங்கள், புதிய தொழில் தொடங்குவதற்கு வழங்கப்படும் வங்கிகடன்கள் குறித்தும் மசூதிகள், கிறித்துவ ஆலயங்கள் புணரமைப்புகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் குறித்தும் திட்டத்தை விரிவாக அனைவரும் தெரிந்து கொண்டு பயனடையும் விதமாக மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் யு.சுதீர் லோதா அவர்கள் கனிணியில் பவர் பாயின்ட் மூலம் விவரித்தார். மேலும் சிறுபான்மையினர் தங்களுடைய நீண்ட கால பிரச்சனைகள் மீது தீர்வு கிடைக்கவில்லை என்றால் அவற்றை தாங்களே pபிழசவயட.பழஎ.in என்ற இணை தள முகவரியில் பதிவுசெய்து அவற்றின் மீது உடனடியாக தீர்வு கிடைக்கபெறும் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வேலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 14 ஏழை முஸ்லீம் மகளிர்களுக்கு உதவித்தொகையாக ரூ59 ஆயிரத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் அவர்களும் கலெக்டர் வழங்கினார்கள்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள் யு.சுதீர் லோதா, கே.கலாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் nஐயபிரகாஷ், மாவட்ட சிறுபான்மையினர் நலச்சங்க பிரதநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.