எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் பேசியதாவது.தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தமத்தினர், பார்சிகள்,(nஐhராஷ்ரியர்கள்) மற்றும் சமண மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மதவழி சிறுபான்மையினத்தவராக கருதப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை, சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான பொதுப்பரிசுகள் வழங்கும் திட்டம், மாநில அளவிலான உருது மொழிப்பரிசுகள் திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல திட்டம் இத்திட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை 1412 பேர் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் இதுவரையில் 299 பயனாளிகளுக்கு ரூ5.08 இலட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் திட்டங்கள், சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு மிகக்குறைந்த வட்டிவித்தில் பல்வேறு கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் வேலூர் மாவட்டத்தில் 483 பயனாளிகளுக்கு ரூ.205.48 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு மூலம்; சிறுபான்மையினர் நலனுக்காக 15 அம்ச நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போல தமிழக அரசும் இந்திய அரசும் சிறுபான்மையின மக்களுக்காக தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள நலவாரிய உறுப்பினர்கள் தங்களுடைய ஆலோசனைகளையும் குறைகளையும் தெரிவித்தால் அவற்றை தீர்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரைத்து உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் கூட்டத்தில் பேசினார்.மேலும் கூட்டத்தில் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி திட்டங்கள், புதிய தொழில் தொடங்குவதற்கு வழங்கப்படும் வங்கிகடன்கள் குறித்தும் மசூதிகள், கிறித்துவ ஆலயங்கள் புணரமைப்புகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் குறித்தும் திட்டத்தை விரிவாக அனைவரும் தெரிந்து கொண்டு பயனடையும் விதமாக மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் யு.சுதீர் லோதா அவர்கள் கனிணியில் பவர் பாயின்ட் மூலம் விவரித்தார். மேலும் சிறுபான்மையினர் தங்களுடைய நீண்ட கால பிரச்சனைகள் மீது தீர்வு கிடைக்கவில்லை என்றால் அவற்றை தாங்களே pபிழசவயட.பழஎ.in என்ற இணை தள முகவரியில் பதிவுசெய்து அவற்றின் மீது உடனடியாக தீர்வு கிடைக்கபெறும் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வேலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 14 ஏழை முஸ்லீம் மகளிர்களுக்கு உதவித்தொகையாக ரூ59 ஆயிரத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் அவர்களும் கலெக்டர் வழங்கினார்கள்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள் யு.சுதீர் லோதா, கே.கலாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் nஐயபிரகாஷ், மாவட்ட சிறுபான்மையினர் நலச்சங்க பிரதநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


