முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் 4 இடங்களில் மானிய விலையில் உலர் தீவனம் விநியோகம்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மானிய விலையில் உலர் தீவனம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை கால்நடை வளர்ப்போர் வாங்கி பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                                     மானிய விலை                              

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில்  தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மசினகுடியில் உள்ள கால்நடை மருந்தகம், ஊட்டியில் பெருமருத்துவமனை, குன்னூர் மற்றும் கூடலூரில் உள்ள கால்நடை மருத்துவமனை ஆகிய நான்கு கால்நடை நிலையங்களில் உலர்தீவன கிடங்குகள் நிறுவப்பட்டுள்ளது. வறட்சி நிலை சீராகும் வரை விவசாயி ஒருவருக்கு ஒரு கால்நடைக்கு தினம் 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 கால்நடைகளுக்கு ஒரு வாரத்திற்கு 105 கிலோ உலர் தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.2  மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

                  உதவி மருத்துவர்

எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர்தீவனக் கிடங்கு அமைந்துள்ள கால்நடை நிலைய கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்