எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் போட்டியில் புஜாரா இரட்டைச் சதம் எடுக்க, சஹா சதத்தை அடிக்க, ஜடேஜாவின் அதிரடி அரைசதத்துடன் இந்தியா 4-ம் நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியாவின் வார்னர், லயன் விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்து கடும் சிக்கலில் உள்ளது.
அவுட்
4-ம் நாளான நேற்று இந்திய அணி 360/6 என்று தொடங்கியது, இதில் புஜாரா 130 ரன்களுடனும் சஹா 18 ரன்களுடனும் களமிறங்கினர். கடைசியில் புஜாரா 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ரன்கள் எடுத்து லயன் பந்தில் மேக்ஸ்வெலிடம் ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விருத்திமான் சஹா 233 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஓகீப் பந்தில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
புஜாராவும், சஹாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்தனர். இதில் சஹாவின் ஸ்ட்ரைக் ரேட் டெஸ்ட் இன்னிங்ஸுக்கான சரிவிகிதத்தில் இருந்தது, அதாவது 50.21சதவீதம் இது சஹாவின் ஒரு மிக முக்கியமான, அருமையான சதம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் புஜாரா சாதனையான 525 பந்துகள் நின்றார். 38.47 சதவீதம் தான் ஸ்ட்ரைக் ரேட். இரட்டைச் சதத்துக்கு நிச்சயம் கூடுதலாக 50-60 பந்துகளை அவர் எடுத்துக் கொண்டுள்ளார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா இறங்கி 55 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 54 எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 603 ரன்களுக்கு இந்தியா 210 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. ஓவருக்கு 2.87 ரன்கள்தான், ஆனால் மிக முக்கியமான, தொடரை முடிவு செய்யும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மிகவும் உழைத்து வீசி 106 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார். ஓகீப் 77 ஓவர்களில் 199 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், சிக்கனமாக வீசினார். நேதன் லயன் 46 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 163 ரன்களுக்கு 1 விக்கெட்.
புஜாராவின் சாதனை:
இந்திய வீரர்களிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிகபந்துகளைச் சந்தித்தவர் என்ற பெருமையை எட்டினார் புஜாரா, அவர் இந்த இன்னிங்ஸில் மொத்தம் 525 பந்துகளை சந்தித்தார். இதுதான் ஒரு இந்திய வீரர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிகபட்ச பந்துகளைச் சந்தித்தத நிகழ்வாகும்.
இவருக்கு அடுத்த படியாக ராகுல் திராவிட் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 270 ரன்களை எடுத்த போது 495 பந்துகளை சந்தித்திருந்தார், இது தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. 491 பந்துகளை எதிர்கொண்டு நவ்ஜோத் சித்து (201) 3-ம் இடத்திலும் 477 பந்துகளை எதிர்கொண்டு ரவிசாஸ்திரி (206) 4-ம் இடத்திலும் 472 பந்துகளை எதிர்கொண்டு சுனில் கவாஸ்கர் (172) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
152 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா தன் 2-வது இன்னிங்ஸை ஆடியது. வார்னர் விக்கெட்டை ஜடேஜா பவுல்டு முறையில் வீழ்த்தினார், ஆப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய அளவில் திரும்பிய பந்து வார்னர் தடுப்பைக் கடந்து ஆப் ஸ்டம்ப்பை பெயர்த்தது. இரவுக்காவலனாக நேதன் லயன் இறங்கினார். அவர் 2 ரன்கள் எடுத்து ஜடேஜா ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்து ஒன்று திரும்ப, மட்டையைக் கடந்து சென்ற பந்து ஸ்டம்பைத் தாக்கியது.
முன்னதாக டி.ஆர்.எஸ். உதவியினால் தப்பி ஆஸி. பந்து வீச்சை வறுத்தெடுத்த புஜாரா, சஹா!
ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் புஜாரா, சஹாவின் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி பயத்தை உருவாக்கியுள்ளது.இருவரும் அபாரமாக ஆடி 7-வது விக்கெட்டுக்காக 229 ரன்களைச் சேர்த்துள்ளனர். தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 152 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.