முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி உரிமங்களை தேசிய படைக்கலன் தரவுத்தள மென்பொருளில் பதிவு செய்யமார்ச் 24-ஆம் தேதி கடைசிநாள்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      ஈரோடு

துப்பாக்கி உரிமங்களை தேசிய படைக்கலன் தரவுத்தள மென்பொருளில் பதிவு செய்ய மார்ச் 24-ஆம் தேதி கடைசிநாள் என ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்  விடுத்த செய்திஈரோடு மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி உரிமைதாரர்களின் விவரங்கள் தேசிய படைக்கல தரவுத்தள மென்பொருளில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி உரிம விவரங்களைப் பதிவு செய்வதற்கு மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.துப்பாக்கி உரிமைதாரர்கள் தங்களது உரிமத்தைப் பதிவு செய்யாமல் இருந்தால் அசல் படைக்கல உரிமம், படைக்கல உரிமத்தின் நகல், இருப்பிட முகவரிக்கான ஆதார நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சி (குற்றவியல்) பிரிவில் ஒப்படைத்து படைக்கல உரிமத்தின் தேசிய தரவுத்தள பதிவு எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். துப்பாக்கிக்கான உரிமத்தைப் பதிவு செய்ய மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்