எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கொரடாச்சேரி , நீடாமங்கலம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
செய்தியாளர் பயணம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மையப்பன் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-2017 ஆம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 270 சதுர அடி பரப்பில் குமார் என்பவருக்கு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து திட்டம் குறித்து பயனாளியின் கருத்தை கேட்டறிந்தார். பின்னர் தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அம்மையப்பன் - ஆணைவடபாதி வரையில் ரூ.44 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் 2 கி.மீ தொலைவிற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இளங்குடி கிராமத்தில் ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாட்டுமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 97 பணியாளர்களை கொண்டு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் குளம் வெட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குளம் வெட்டும் பணியில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயத்திற்கு வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பருத்தியூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2016-2017 நிதியாண்டில் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 1 கறவை பசு ரூ.40 ஆயிரத்து 250 வீதம் மொத்தம் ரூ.20 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அசோலா மற்றும் பசுந்தீவணங்களை வழங்கினார். பின்னர் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதங்குடி ஊராட்சியில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் 2016-2017 ஆம் நிதியாண்டில் 408 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வெள்ளாடு தலா ரூ.12 ஆயிரத்து 950 மதிப்பில் 4 வெள்ளாடுகள் வீதம் மொத்தம் ரூ.52 லட்சத்து 83 ஆயிரத்து 600 மதிப்பிலான வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். பயனாளியான சரஸ்வதி என்பவர் 2012 ஆம் ஆண்டு 4 வெள்ளாடுகள் வழங்கப்பட்டதாகவும், அந்த ஆடுகள் தற்போதுவரை 30 வெள்ளாட்டுக்குட்டிகள் ஈன்றுள்ளதாகவும் , வருவாய் கிடைப்பதாகவும் மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாக்கோட்டை ஊராட்சியில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.48 ஆயிரத்து 850 மதிப்பில் வழங்கப்பட்டுள்ள நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணையினை பார்வையிட்டும், அசோலா பசுந்தீவணம் வளர்த்தல் பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
கலெக்டர் பேட்டி
அப்போது மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது....திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.83 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளையும்,கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.73 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளின் கருத்தையும் கேட்டறிந்துள்ளோம். தமிழகஅரசு செயல்படுத்தும் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது என பயனாளிகள் தெரிவித்தனர் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் ,, தெரிவித்தார்.
இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன்,வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் மரு.ரவீந்தரன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செல்வராஜ், துணை இயக்குநர் மரு.முகமது உதுமான் , உதவி இயக்குநர்கள் மரு.ஈஸ்வரன்,மரு.ஹமீது அலி, உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
14 May 2024 -
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.