முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த தாய்-மகன் படுகொலை

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

விஜயவாடா  - அமெரிக்காவின் நியூஜெர்சியில் ஆந்திராவை சேர்ந்த தாய்-மகன் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

என்ஜினீயர்கள்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹனுமந்தராவ். இவரதுமனைவி சசிகலா. இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். இவர்களுக்கு அனீஸ் சாய் (7) என்ற மகன் இருந்தான். ஹனுமந்தராவ் தனது மனைவி மகனுடன் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தங்கியுள்ளார். 9 ஆண்டுகளாக இவர்கள் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.

தாய்-மகன் கொலை
நேற்று முன்தினம் மாலை அலுவலக பணி முடிந்து ஹனுமந்தராவ் வீடு திரும்பினார். அங்கு அவரது மனைவி சசிகலாவும், மகன் அனீஸ் சாயும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இவர்களை கொலை செய்தது யார்? ஏன் இக்கொலை நடந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இனவெறி தாக்குதலா ?
சமீபகாலமாக அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கானாவை சேர்ந்த ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் ஸ்ரீனிவாஸ் ருச்சி போத்லா (32) கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கன்சால் ஒலாந்தேவில் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ஆடம் எம்.பரிந்தான் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தெலுங்கானாவை சேர்ந்த வம்சி ரெட்டி மமிடாலா என்பவர் கடந்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி கலிபோர்னியாவின் மில்பிடாஸ் நகரில் சுட்டு கொலை செய்யப்பட்டார். அது போன்று, இதுவும் இனப்படுகொலை காரணமாக நடந்ததா? என்றும் விசாரணை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்