முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்பேரமநல்லூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பேரமநல்லூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது.

 

உதவி தொகை

 

முகாமில் வாலாஜாபாத் வாட்டாட்சியர் சுமதி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசித்ரா, சிறப்பு வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை மாவட்ட ஆட்சியர் மனோகரன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 64 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 27 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 37 மனுக்கள் நிலுவை உள்ளது, நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்