முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கோட்டையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக நீர்மோர் பந்தல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பேருந்து நிலையத்தில் அ.இ.அ.தி.மு.க(புரட்சித்தலைவி அம்மா) ஓ.பி.எஸ் அணி சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின் படியும் நத்தம் விஸ்வநாதன் உத்திரவின்படியும் நிலக்கோட்டை ஒன்றிய நகர கழகத்தின் சார்பாக நிலக்கோட்டை மினி பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தலை நத்தம் ஆர்.வி.என். கண்ணன் தலைமையில் திறந்து வைத்து பேசினார்.அவர் கூறும்போது
வெயிலின் தாகம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து காப்பாற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருடந்தோறும் கோடைகாலத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தனிக்க வேண்டும் என உத்திரவிட்டு இருந்தார். அந்த உத்திரவின் படியும் அவர் வழி நடத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்திரவுபடி நிலக்கோட்டையில் இந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து மக்களுக்கு தாகம் தனித்திட வேண்டும்  மக்களின் மனம் அறிந்து மக்களுக்காக மக்கள் நலனின் என்றும் தனி கவனம் செலுத்தப்படும்.
           தமிழகத்தில் அம்மா மறைவுக்கு பின் ஓ.பன்னிர்செல்வத்தின் பின்னால் மக்களும் கட்சியும் இருக்கிறது தற்காலிகமாக ஆட்சி மட்டும் அவர்களிடம் உள்ளது இது ஒரு தனிப்பட்ட குடும்ப ஆட்சி அந்த குடும்ப ஆட்சியை அகற்றி விட்டு அனைத்து தொண்டர்களும் அம்மா வழியில் நின்று மக்கள் பணியை ஆற்ற நேரம் வெகு தொலைவில் இல்லை அம்மாவிற்கு வாரிசு என்று யாரையும் கூறவில்லை. இவ்விழாவிற்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வேனுகோபால், பொது குழு உறுப்பினர் நெப்போலியன், ஒன்றிய நகர பொருப்பாளர் நாகரத்தினம், ராஜாநாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மீசை பாண்டி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லட்சுமி செல்வராஜ், முருகன், மூர்த்தி, சுப்பையா, மற்றும் கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். நீர் மோர் பந்தலில் தற்பூசனி, வாழைப்பழம், ஆரஞ்சு, வெள்ளரிக்காய், மற்றும் இளநீர் திராட்சை ஆகியவையுடன் கூடிய நீர் மோர் மக்களுக்கு வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்