முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் பெரியபுலியூர் ஊராட்சி, வளையக்காரபாளையம் பகுதியில் வாரக்காடு தடுப்பணை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டம், பெரியபுலியூர் ஊராட்சி, வளையக்காரபாளையம் பகுதியில் வாரக்காடு தடுப்பணை தூர்வாரும் பணியினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம், பெரியபுலியூர் ஊராட்சி, வளையக்காரபாளையம் பகுதியில் 450 மீட்டர் நீளமும், 250 மீட்டர் அகலமும் பரப்பளவு கொண்ட வாரக்காடு தடுப்பணையினை ஒளிரும் ஈரோடு சார்பில் தூர்வாரும் பணி ரூ.25 முதல் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி 2 வாரத்தில் முழுவதுமாக முடிப்பதற்கு ஏதுவாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் வி.சின்னசாமி  மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்  அவர்களிடம் தெரிவித்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் வி.சின்னசாமி, அறங்காவலர் டி.சதீஷ்குமார்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்