முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெடுங்குணம் ஸ்ரீராமச்சந்திரபெருமாள் கோயிலில் தேர் திருவிழா.

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் ஸ்ரீராமச்சந்திரபெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தேர் திருவிழா நடைபெற்றது. சேத்துப்பட்டு அருகே உள்ள நெடுங்குணம் ஸ்ரீராமச்சந்திரபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 4 அன்று துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை தேர் திருவிழா நடைபெற்றதில் சுவாமியை அலங்காரம் செய்யப்பட்டு தேரில் அமர்த்தி தேர் திருவிழா துவங்கியது. இதில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் சசிகலா, ஆய்வாளர் மனோகரன், கோயில் நிர்வாகக்குழு தலைவர் மனோகரன், முன்னாள் ஊராட்சித்தலைவர் ஏழுமலை மற்றும் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதிகள் வழியாக சென்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்