முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அதிபர் பட்டா உத்தரவு

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

கெய்ரோ  - எகிப்து தலைநகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் 3 மாதங்களுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அதிபர் பட்டா அல்-சிசி உத்தரவிட்டுள்ளார்.

திடீர் தாக்குதல்
எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ளது டான்டா நகரம். அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தல், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தேவாலயத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில், பிரார்த்தனை செய்துகொண்டிருந்த பலர் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவசர நிலை
ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றிருக்கின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் அடுத்த மூன்று மாதத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு குடியரசு தலைவர் அப்தெல் பட்டா அல்-சிசி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்