முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்; அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எம்.ரவி குமார் 25 நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும், 18 திருநங்கைகளுக்கும் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாகளை வழங்கினார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சமீபத்தில் வசிக்கும் மாங்கனி, மஞ்சு, மகேஷ்வரி, கௌரி, அஜயன், மாவீரன், குமார், முனியம்மாள், ராஜ்குமார், முருகன், முனியம்மாள், கொளஞ்சி, பாரதி, சூர்யா, கமல், பூவை, அஞ்சலி, முனியம்மாள், குமாரி, ஜெயமாலா, காய்திரி, ஸ்ரீதேவி, மலர், சவுந்தர்யா, விஜயகுமாரி ஆகிய 25 நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும், 18 திருநங்கைகளுக்கும் என மொத்தம் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்கள்;.இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், பயிற்சி ஆட்சியர் ராஜகோபால சுங்கரா, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராஜையா, மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்