முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்பேடு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      சென்னை

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணைய ர் கரன்சின்கா, உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். அதன்பேரில், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நெற்குன்றம் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஜெயலட்சுமி நகரில் உள்ள தனியார் விடுதியை கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.உத்திரசெல்வம், வ/52, கோயம்பேடு 2.முருகானந்தம், வ/30, நெற்குன்றம் 3.செந்தில் குமார், வ/39, மதுரவாயல் 4.ஜெயக்குமார், வ/47, நெற்குன்றம் 5.சதிஷ்குமார், வ/32, த கோயம்பேடு 6.சேகர். வ/58, கோயம்பேடு ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7,500/- மற்றும் 3 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்