முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமைக்காவை சேர்ந்தவர் உலகின் வயதான பெண்மணியானார்

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

கிங்ஸ்டன்  - உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் பெற்றுள்ளார்.

117வது பிறந்தநாள்
ஜமைக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் வைலட் பிரவுன் (117), இவர் தான் தற்போது உலகிலேயே வயதான பெண் ஆவார். வைலட் கடந்த 1900 ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தான் இவர் தனது 117வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். பிரவுன் தனது 97 வயதான மகனுடன் தற்போது வசித்து வருகிறார். தனது ஆயுள் ரகசியத்தை பற்றி அவர் கூறுகையில், நான் கடுமையாக உழைப்பேன்.

ஆயுள் ரகசியம்
பன்றி, கோழி தவிர எல்லா உணவுகளையும் நான் சரியான அளவில் சாப்பிடுவேன் என அவர் கூறியுள்ளார். இதை தவிர என் நீண்ட ஆயுளுக்கு ரகசியம் வேறேதுமில்லை எனவும் வைலட் கூறியுள்ளார். உலகின் வயதான பெண்ணாக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்கு பிறகு அந்த பெருமைக்கு வைலட் தற்போது சொந்தகாரராக ஆகியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்