முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதாரண்யம் அருகே செம்போடையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

வேதாரண்யம் - நாகப்பட்டினம் சாலையில் தேத்தாகுடி யிலிருந்து ஈரவாய்க்கால் வரை உள்ள குறுகலான தார்சாலைகள் அகலப் படுத்தி மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அகற்றும் பணி

செம்போடை கடைவீதியில் சாலையோரத்தில் நெடுஞ்;சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன போக்குவரத்திற்கு இடையூராக உள்ள கடைகளை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வட்டாட்சியர் இளங்கோவன் முன்னிலையில் வருவாய்த்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது ராமசாமி என்பவரின் கடையை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற முற்பட்ட போது ராமசாமி குடும்பத் தினருடன் தடுத்தனர் இவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்