முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி கட்சியின் தோல்விக்கு காங்கிரஸ் கூட்டணியே காரணம் : முலாயம் சிங் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 8 மே 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த தால்தான் சமாஜ்வாடி கட்சி படு தோல்வியடைந்தது என்று முலாயம் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் கர்கால் பகுதியில் உள்ள ஜுனிசா கிராமத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி படுதோல்வியை சந்தித்ததற்கு காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்ததே காரணம். நான் அகிலேஷிடம் சொன்னேன் காங்கிரஸுடன் கூட்டணி வேண் டாம் என்று. அவர் கேட்கவில்லை.

போலியான கூட்டணி
தேர்தல் தோல்விக்கு பொது மக்கள் காரணம் அல்ல. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என் மீது ஏராள மான வழக்குகளைப் போட்டது. ஆனால், அகிலேஷ் அக்கட்சி யுடன் போலியான கூட்டணி வைத்தார். பலம் இழந்த சமாஜ்வாடி கட்சியை மீண்டும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  அப்போது, முலாயமிடம் நிருபர்கள், சிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், சமாஜ்வாடி கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்