முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருபுபூர் மாவட்டத்தில் மின்சாரம், குடிநீர் வடிகால், உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் ச. ஜெயந்தி, தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 18 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருபுபூர் மாவட்ட ஆட்சியர அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு  மின்சார வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி,   தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது 

சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை

பொது மக்களுக்கு தங்குதடையின்றி சீராக குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையின்றி மின்சாரம் வழங்கவும், அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறும் தமிழ்நாடு மின்சார வாரிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் மாவட்ட கலெக்டர்  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் (பொ) மைக்கேல், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), திருப்பூர், மாநகராட்சி செயற்பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)கள், அனைத்துத் துறை செயற்பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்