எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான பாதைக்கு வரவேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்..
மேட்டுப்பாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதாவின் 69–வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்புவிழா என ஐம்பெரும் விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஜெயலலிதா பேரவை,சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஐம்பெரும் விழா நடந்தது.விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இணைந்து செயல்பட வேண்டும்:-
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ. திமுக உடைந்து விடும் என்று நினைத்தனர். உடைக்கவும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் கனவு பலிக்கவில்லை.ஒருசிலர் பிரிந்து சென்றார்கள்.தாய் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான பாதைக்கு வரவேண்டும். ஜெயலலிதா இரவு பகல் பாராது சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். அதன் காரணமாகவே நான் இன்று முதலமைச்சராக பதவியில் இருக்கிறேன். வெளியில் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் உழைப்பால் பதவி பெற்றவர்கள். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
பகல் கனவு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை கலைத்து விடலாம் என்றும், கட்சியை அழித்து விடலாம் என்றும் சிலர் கனவு கண்டார்கள். அது பகல் கனவாகவே போய் விட்டது. எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வாரிசுகள் கிடையாது. அவர்களுக்கு வாரிசு என்று சொன்னால் இங்கே இருக்கிறவர்களும், தொண்டர்களும் தான்.
இங்கிருக்கின்ற எம்எல்ஏக்கள் ஜெயலலிதாவின் செல்வாக்கால் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். தேர்தல் காலத்தில் அவர் (ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஓ.கே.சின்னராஜ்) பல வாக்குறுதிகளை தந்திருப்பார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசோடு இணைந்து செயல்படவேண்டும்.
ரூ.224 கோடி
மேட்டுப்பாளையம் நகரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.224 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக நிலம் ஒதுக்கீடுக்காக ரூ.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகரில் ரூ.92 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அத்திக்கடவு –அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து நீங்கள் ஆதரவு தரவேண்டும். அமெரிக்காவில் என்ன கல்வி கிடைக்கிறதோ அதே தரமான கல்வி கிடைக்க ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வித்தரம் உயர எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். ஏழை எளிய மாணவர்கள் ரூ.14ஆயிரத்திற்கு கம்ப்யூட்டர் வாங்க முடியாத நிலையில் அந்த மாணவர்களுக்கு இலவசமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினி கொடுத்தார்.
தி.மு.க. ஆட்சிக்கு முடிவு:-
அ.திமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சிக்கு முடிவுகட்ட தான் அ. தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கினார். எம்ஜிஆர் 11 ஆண்டுகள்,6 முறை ஜெயலலிதா முதல்வராக இருந்து சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார்கள். இந்தியாவிலேயே சிறந்த முறையில் பணியாற்றியவர் என்ற பெருமை ஜெயலிதாவிற்கு உண்டு. எம்ஜிஆர் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை . எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதா ஏழை எளிய மக்கள் வாழ்நாள் முழுவதும் பயனடைய தங்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் தனது உடல் நலத்தையும் பாராமல் உழைத்து வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் இந்த அரசு செயல்படும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதைதொடர்ந்து விழாவில் 2 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.பின்னர் மாற்று கட்சியில் இருந்து அ தி.மு.க.வில் 1000 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முதல்வர் வரவேற்றார். இதன் பின்னர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை முதல்வர் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
கனமழை: கர்நாடக மாநிலத்தில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
12 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார