எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கரிலும் , வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏக்கரிலும் மானாவாரி நிலப்பகுதிகளில் பயிர் மகசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மானாவாரிப்பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.
‘ மழையை மட்டுமே நம்பியுள்ள வானம் பார்த்த பூமியில் - மானாவாரி விவசாயத்தில் தானியங்கள் , பயறுவகைகள் , எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடியையும் , உற்பத்தியையும் அதிகரித்து , விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ‘நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-17 ம் ஆண்டு முதல் 2019- 20 ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் இதற்கு 802.90 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 2500 ஏக்கர் மானாவாரி சாகுபடி நிலங்கள். ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளைக் கொண்டு ஒரு தொகுப்பாக (கிளஸ்டர்) ஒருங்கிணைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் ஏக்கரில் இந்த மாபெரும் திட்டம் செயலாக்கம் செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் 25 மாவட்டங்களில் 2500 ஏக்கரில் அமைத்த 200 தொகுப்புகள் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதில் தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ,வட்டாரக் குழுக்கள் , உழவர் மன்றக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு , விவசாயிகள் ஆலோசனையின்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஒருபகுதியாக நடப்பு ஆண்டில் நம்பியூர் ஒன்றியத்தில் வேமாண்டம்பாளையம் , அஞ்சானூர் ,இலாகம்பாளையம் , இருகாலூர் - ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கர் மானாவாரி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு , இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் 5 கலப்பை கொண்ட டிராக்டரில் உழவு செய்யும் விவசாயிகளுக்கு , பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 500 ரூபாய் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது. (படம் இணைப்பு) மேலும் விதைகள் , உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் 50 சத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆலோசனைகளும் , இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமும் மானியம் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்துதல் , பயிர் உற்பத்தி செயல்விளக்கத் திடல்கள் அமைத்தல் , பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம் , பண்ணைக்குட்டைகள் , தடுப்பணைகள் அமைத்தல் , மினிகிட்டுகள் , தெளிப்புநீர்பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன. மானாவாரி விவசாயத்தில் மகசூல் குறைவாக உள்ளதாலும் , உணவுப் பயிர்களின் சாகுபடிப்பரப்பு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதாலும் அதற்கேற்ப புதிய இரக விதைகள் , இடுபொருள்கள் , நவீன தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நம்பியூர் வட்டாரத்தில் இத்திட்டத்தின் அடுத்த பகுதியாக அடுத்த ஆண்டில் நிலக்கடலை சாகுபடி அதிகம் செய்யப்படும் இரண்டு கிராமங்களில் மேலும் 5 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதற்கான முன் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன “ - எனத் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன் , வேளாண்பொறியியல்துறை உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் உழவர் குழுப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறினர். வேமாண்டம்பாளையம், இலாகம்பாளையம் , அஞ்சானூர் ,இருகாலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பவ்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
நிறைவாக குருமந்தூர் துணை வேளாண்மை அலுவலர் மாதவன் நன்றி கூறினார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கோபி சிவம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள்: கட்சியினருக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
09 May 2025சென்னை, எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
09 May 2025சென்னை : புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
மத்திய அரசின் கனவு தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது: த.வெ.க.
09 May 2025சென்னை : தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
-
தாக்குதல் முயற்சி முறியடிப்பு; பாதுகாப்பு படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
09 May 2025ஸ்ரீநகர், 'பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.