எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நம்பியூர் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கரிலும் , வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏக்கரிலும் மானாவாரி நிலப்பகுதிகளில் பயிர் மகசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மானாவாரிப்பகுதி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.
‘ மழையை மட்டுமே நம்பியுள்ள வானம் பார்த்த பூமியில் - மானாவாரி விவசாயத்தில் தானியங்கள் , பயறுவகைகள் , எண்ணெய்வித்துக்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடியையும் , உற்பத்தியையும் அதிகரித்து , விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ‘நீடித்த மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016-17 ம் ஆண்டு முதல் 2019- 20 ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் இதற்கு 802.90 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 2500 ஏக்கர் மானாவாரி சாகுபடி நிலங்கள். ஒன்று அல்லது இரண்டு கிராம ஊராட்சிகளைக் கொண்டு ஒரு தொகுப்பாக (கிளஸ்டர்) ஒருங்கிணைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 25 லட்சம் ஏக்கரில் இந்த மாபெரும் திட்டம் செயலாக்கம் செய்யப்படவுள்ளது. நடப்பு ஆண்டில் 25 மாவட்டங்களில் 2500 ஏக்கரில் அமைத்த 200 தொகுப்புகள் 5 லட்சம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதில் தொகுப்பு மேம்பாட்டுக் குழுக்கள் ,வட்டாரக் குழுக்கள் , உழவர் மன்றக் குழுக்கள் போன்றவை அமைக்கப்பட்டு , விவசாயிகள் ஆலோசனையின்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஒருபகுதியாக நடப்பு ஆண்டில் நம்பியூர் ஒன்றியத்தில் வேமாண்டம்பாளையம் , அஞ்சானூர் ,இலாகம்பாளையம் , இருகாலூர் - ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்து அய்நூறு ஏக்கர் மானாவாரி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு , இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் 5 கலப்பை கொண்ட டிராக்டரில் உழவு செய்யும் விவசாயிகளுக்கு , பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு 500 ரூபாய் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது. (படம் இணைப்பு) மேலும் விதைகள் , உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் 50 சத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாய விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆலோசனைகளும் , இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. கால்நடைப் பராமரிப்புத்துறை மூலமும் மானியம் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்துதல் , பயிர் உற்பத்தி செயல்விளக்கத் திடல்கள் அமைத்தல் , பண்ணை இயந்திரங்கள் வாங்க மானியம் , பண்ணைக்குட்டைகள் , தடுப்பணைகள் அமைத்தல் , மினிகிட்டுகள் , தெளிப்புநீர்பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளன. மானாவாரி விவசாயத்தில் மகசூல் குறைவாக உள்ளதாலும் , உணவுப் பயிர்களின் சாகுபடிப்பரப்பு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதாலும் அதற்கேற்ப புதிய இரக விதைகள் , இடுபொருள்கள் , நவீன தொழில்நுட்பங்கள் இத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நம்பியூர் வட்டாரத்தில் இத்திட்டத்தின் அடுத்த பகுதியாக அடுத்த ஆண்டில் நிலக்கடலை சாகுபடி அதிகம் செய்யப்படும் இரண்டு கிராமங்களில் மேலும் 5 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு , அதற்கான முன் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன “ - எனத் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் ஜீவதயாளன் , வேளாண்பொறியியல்துறை உதவிப்பொறியாளர் வெள்ளியங்கிரி , கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் உழவர் குழுப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூறினர். வேமாண்டம்பாளையம், இலாகம்பாளையம் , அஞ்சானூர் ,இருகாலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பவ்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
நிறைவாக குருமந்தூர் துணை வேளாண்மை அலுவலர் மாதவன் நன்றி கூறினார். நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்டப் பணியாளர்கள் கூட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கோபி சிவம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
13 Oct 2025சென்னை : பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.