எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இறைச்சிக்காக மாடுகள் வெட்ட மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், யார் எதை சாப்பிடுவது என்பதை மோடி-அமித்ஷா முடிவு செய்வதா? என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் நேரு. இந்த நாளில் நாடு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலனை செயல்படுத்தாத அரசாகவும், பிரச்சினைகளை கண்டு கொள்ளாத அரசாகவும் உள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மோடி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடை விதித்துள்ளார். இதுவா இப்போது முக்கியம். யார் என்ன சாப்பிட வேண்டும். எப்போது சாப்பிட வேண்டும். எதை சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் மோடியும் அமித்ஷாவுமா முடிவு செய்வது? என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் 2 ஆண்டுகளில் மொத்த செல்வாக்கையும் இழந்து விடும். அதன் பிறகு ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க., பாரதிய ஜனதாவின் பிடியில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கட்சியை உடைக்கப் பார்த்தார்கள். இப்போது உடைந்த கட்சியை ஒன்று சேர்த்து காலூன்ற பார்க்கிறார்கள். எக்காரணத்தை கொண்டும் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது. பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால் முக்கிய பிரச்சினைகளிலும் அ.தி.மு.க.வால் எதிர்த்து குரல் கொடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


