எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் திரு கே. விவேகானந்தன், தலைமையில் நேற்று (31.05.2017) நடைபெற்றது.
நிவாரணத்தொகை
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் விபத்து நிவாரண உதவித் தொகையாக 5 பயனாளிகளுக்கு ரூ. 5 இலட்சத்து 12 ஆயிரத்து 500ஃ-ம், சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் உதவி தொகை 32 பயனாளிகளுக்கு ரூ. 38 இலட்சத்து 40 ஆயிரமும், திருமண உதவித் தொகை 23 பயனாளிகளுக்கு ரூ. 1 இலட்சத்து 84 ஆயிரமும், இயற்கை மரண உதவித் தொகை 27 பயனாளிகளுக்கு ரூ. 3 இலட்சத்து 37 ஆயிரத்து 500-ம், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ. 66 ஆயிரமும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு மா அடர் நடவு ரூ. 19 ஆயிரத்து 600-ம், 2 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசன இடுபொருள் ரூ. 1 இலட்சத்து 16 ஆயிரத்து 100-ம், வேளாண்மைத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு துவரை விதை மற்றும் 2 பயனாளிகளுக்கு காரமணி விதை ரூ. 2 ஆயிரத்து 191-ம், பட்டா மாற்றம் மற்றும் தனிப்பட்டா 23 பயனாளிகளுக்கும், இதர சான்றிதழ்கள் 41 பயனாளிகளுக்கும் என மொத்தம் 171 பயனாளிகளுக்கு ரூ. 52 இலட்சத்து 27 ஆயிரத்து 853- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அலுவலர்கள் மாதந்தோறும் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, புதுவாழ்வுத் திட்டம் என அரசின் பல துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தனிநபர் கழிப்பறை அமைக்க அரசு ரூ. 12 ஆயிரம் மானியம் வழங்குகிறது. அதனை பெற்று தனிநபர் கழிப்பறை அமைக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். பொதுமக்கள் தனிநபர் கழிப்பறையை அமைப்பதற்கு அந்தந்த வட்டத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே விண்ணப்பித்து பயன்பெறலாம். காரிமங்கலம் வட்டத்தில் 1000 ஹெக்டர் அளவிற்கு மானாவாரி நிலங்களை உழவு செய்ய உழவு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்திற்கு சமூக பொருளாதார கணக்கெடுப்பு விதியை தளர்வு செய்யப்பட்டு இந்திரா குடியிருப்பு, பசுமை வீடுகள் திட்டத்தில் 4800 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பட்டா 11000 வழங்கம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காரிமங்கலம், பாலக்கோடு 1500 இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சுமார் 4,00,000 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் மனு மீது உரிய விசாரணை செய்து ஒருவார காலத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 48 டன் அரிசி வழங்கப்பட உள்ளது. தற்போது 20 டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த 75 மனுக்கள் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைய மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் கே.விவேகானந்தன், பேசினார்.
மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி சான்று, வருமானம் சான்று, இருப்பிடச்சான்றிதழ் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும், பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் அறிய வேண்டுமெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 ஆகிய எண்களின் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் புகார்களையும் கூறலாம். மேலும் அம்மா கைபேசி எண். 1100 எண்ணின் மூலமாக தங்களது குறைகளையும் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குப்புசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரா.ரா. சுசீலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இலாஹிஜான், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ரேவதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) மல்லிகா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 3 sec ago |
ஆனியன்ப்ரை4 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார
-
மேற்குவங்க கவர்னரை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? - பிரதமர் மோடிக்கு மம்தா கேள்வி
12 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் இருந்தும், பிரதமர் மோடி ஏன் அவரை ராஜினாமா செய்ய சொல்லவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ள
-
கிராண்ட் செஸ் டூர் தொடர்: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
12 May 2024வார்சா : கிராண்ட் செஸ் டூர் தொடரில் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் பிரக்ஞானந்தா.
3 பேர் பங்கேற்பு...
-
சோப்ராவுக்கு வெள்ளிப்பதக்கம்
12 May 2024கத்தார் தலைநகர் தோகாவில் 'டைமண்ட் லீக்' போட்டி நடைபெறுகிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி : பிளே ஆப் சுற்றில் நீடிக்கிறது
12 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
-
அமெரிக்க நகைச்சுவை தொடர் Garfield
13 May 2024ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!
தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்!
-
ஹிட்லிஸ்ட் இசை வெளியீடு
13 May 2024இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது 'ஹிட்லிஸ்ட்' திரைப்படம்.
-
"குற்றம் புதிது" பட தொடக்க விழா
13 May 2024GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் " குற்றம் புதிது "
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
13 May 2024 -
ஸ்டார் விமர்சனம்
13 May 2024சின்ன வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்ற கனவோடு நாயகன் கவின் பயணிக்கிறார்.
-
இம்மாதம் வெளியாக உள்ளது 'எலக்சன்'
13 May 2024ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளி
-
ரசவாதி விமர்சனம்
13 May 2024நாயகன் அர்ஜுன் தாஸ், சித்த மருத்துவர் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'
13 May 2024குழந்தைகளின் திரைப்படமாக 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறியதாவது.