முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் வசந்த உற்சவ விழா

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில், - முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவும் ஒன்று. இந்த விழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதில் காப்பு கட்டுதல், மஹா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தினமும் மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் மஹாதீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம். பின்னர் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடும் நடந்தது.
தொடர்ந்து வருகிற 7ம் தேதி வைகாசி விசாகத்தையட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவார்கள். அன்று முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், தேன், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். விழாவையட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து