முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தின் புதிய மு.ராஜாமணி பொறுப்பேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      திருச்சி

திருச்சி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக மு.ராஜாமணி நேற்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய கலெக்டர்

பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகும். நான் இங்கு வருவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றியுள்ளேன். தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாகவும், முறையாகவும், எந்தவித சிரமமும் இன்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

தமிழகத்தில் தற்போது வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு போதிய அளவு தமிழக அரசு நிதி வழங்கி இருக்கிறது. குடிநீர் பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் குடிநீர் பிரச்சனைக்கு போதிய அளவு நிதி வழங்கி இருக்கிறது. கூடுதலாக ஊரக நகர்புற வளர்ச்சி நிதியிலிருந்தும் குடிநீர் பிரச்சனை தீர்க்க நிதி வழங்கப்படுகிறது. நிதி ஒரு பிரச்சனையாக இருக்காது. குடிநீர் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு காணப்படும்.

மாவட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள், திட்டங்கள், துறை வாரியாக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொன்றாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும். மேலும் மக்கள் நலக் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் எனது கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் மு.ராஜாமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து