முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரத்தில் முருங்கை ஆராய்ச்சி நிலையம் அமைத்து உலக அளவில் ஏற்றுமதி செய்வோம் டாக்டர்.அன்புமணிராமதாஸ் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.-  பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், ஒட்டன்சத்திரத்தில் முருங்கை காய் ஆராய்ச்சி நிலையம் அமைத்து உலக அளவில் ஏற்;றுமதி செய்து விவசாயிகள் வாழ்வில் மேன்மை அடைய செய்வோம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த பாராட்டு விழா, வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர்.அன்புமணிராமதாஸ் பேசினார்.
 உச்சநீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3321 டாஸ்மாக் மதுபான கடைகளும், இந்தியா முழுவதும் 90 ஆயிரம் மதுபான கடைகளும் மூட சட்ட ரீதியான தக்க நடவடிக்கை எடுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு பா.ம.க திண்டுக்கல் வடக்கு மாவட்ட மக்கள் சார்பாக பாராட்டு விழா, வெற்றி விழா, மாபெரும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோடு, கார்த்திக் திரையரங்கும் முன்பு நடைபெற்றது. இதில் முன்னாள் நடுவன் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி இளைஞர் சங்க தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
 
நடிகர்கள் தேவையில்லை :-
 அரசியலுக்கு நடிகர்கள் தேவையில்லை. படித்தவர்கள், இளைஞர்கள் வரவேண்டும். இவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் அதிகமாகவே உள்ளனர். தமிழகத்தில் நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து குளங்களை தூர்வாரி வருகின்றோம். ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் குளங்களை தூர்வாருவதாக கூறுகிறார். தி.மு.க ஆட்சியிலிருந்தபோது ஏன் குளங்களை தூர்வாரவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் 42 ஆயிரம் ஏரி, குளங்கள் இருந்தன, தற்போது அவை 37 ஆயிரமாக குறைந்துவிட்டன.
தொழிற்சாலை :-
 ஊழல் இல்லாமல் படித்தவர்கள், நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நான் முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. பா.ம.க ஆட்சிக்கு வந்தால் ஒட்டன்சத்திரத்தில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை, முருங்கைகாய் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து உலக அளவில் ஏற்றுமதி செய்வோம். காய்கனிகளை பாதுகாக்க மெகா குளிர்பதன கிடங்கு அமைப்போம்.
 இதில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, மாநிலதுணை பொதுச்செயலாளர் க.ஜோதிமுத்து, மாவட்ட செயலாளர் அ.வைரமுத்து,  மாநில மகளிர் அணி கஸ்தூரி, மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா, மாநில துணை தலைவர் கவிஞர் திலகபாமா,  மாநில செயற்குழு உறுப்பினர் மரு.ஸ்ரீ.முத்துசுவாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் பெ.முருகேசன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எஸ்.வி.டி.வேல்குமார், ஒன்றிய செயலாளர்கள் தெற்கு ந.சதீஸ்குமார், வடக்கு செல்வக்குமார், மேற்கு சதீஸ்குமார், கிழக்கு மணிவேல் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் பி.பூவலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் ஹோட்டல் சண்முகம், செல்லமுத்து, நகர அமைப்பு செயலாளர் இ.அர்சுனன், ஒட்டன்சத்திரம் ஒன்றிய அமைப்பு செயலாளர் சின்னதுரை, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேஸ், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளைச் சார்ந்த நிர்வாகிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளை, கழக உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில்  ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் பி.பூவலிங்கம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து