முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் அரசு கலைக்கல்லூரி புதிய வகுப்பறை கட்டடம் ,மண்மங்கலம் அண்ணாநகரில் அங்கன்வாடி புதிய கட்டடம் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம்,தாந்தோணி;யில் உள்ள அரசுக்கலைக் கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கும், மண்மங்கலம் வட்டம் அண்ணாநகரில் அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டட கட்டுமான பணிகளுக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அன்று (17.06.2017) மாவட்ட கலெக்டர் கு.கேவிந்தராஜ். தலைமையில் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

ரூ.75 லட்சம்

இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக மண்மங்கலம் வட்டம் அண்ணாநகரில் ரூ.75 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடிமைய புதிய கட்டிடத்திற்கும்,தாந்தோணி மலையில் உள்ள அரசுக்கலைக் கல்லூரியில் ரூ.105 இலட்சம் மதிப்பில் 9 புதிய வகுப்பறை கட்டடத்திற்கு கட்டுமான பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்து உரிய காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்டஅலுவலர் கவிதா,கல்லுரி முதல்வர் ராஜேந்திரன்,வருhய்கோட்டாட்சியர் பாலசுப்பரமணியன்,செய்தி மக்கள தொடர்பு அலுவலர் செந்தில்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கமணி,கூட்டுறவு சங்க பிரதிநிகள் காளியப்பன்,நெடுஞ்செழியன்,ஜெயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து