முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் - ப்ரணீத் - சாய்னா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சாய்னா, ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணீத் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கடந்த வாரம் இந்தோனேசிய ஓபன் தொடரை கைப்பற்றிய ஸ்ரீகாந்த் கிதாம்பி, சீனதைபே வீரர் கான் சயோ யுவை 21-13, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ப்ரணீத் - சாய்னா முன்னேற்றம்

சாய் ப்ரணீத் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை 10-21, 21-12, 21-10 என வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான சன் வாய் ஹோ-வை எதிர்கொள்கிறார். சாய் ப்ரணீத் சீனாவின் ஹூயாங் யுஜியாங்-வை எதிர்கொள்கிறார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாய்னா, கொரியாவின் சங் ஜி ஹியுனை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-10, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து