முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் வீரர்களுக்கு பாக். வீரர் அசார் அலி நன்றி

புதன்கிழமை, 21 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத் : தனது மகன்களுடன் நேரம் செலவழித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிபோட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலியின் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அசார் அலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த இந்த ஜாம்பவான்களுக்கு நன்றி என்றும், இதனால் தனது குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.  முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸின் மகனை டோனி கையில் தூக்கி வைத்துக் கொஞ்சும் புகைப்படம் வைரலானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து