முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் தள்ளுபடி ஒரு ஃபாஷன் ஆகி விட்டது: மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கிண்டல்

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இப்போதெல்லாம் கடன் தள்ளுபடி என்பது ஃபாஷன் ஆகி விட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அமைப்பையும் விவசாயிகளையும் தக்கவைக்க இது அவசியமாகிறது என்றார்.

கடன்கள் மிகவும் முடியாதபட்சத்தில் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட வேண்டும், இது இறுதித் தீர்வு அல்ல, என்கிறார் வெங்கய்ய நாயுடு. கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று ரூ.8,165 கோடி அளவிலான பயிர்க்கடனை விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்து அறிவித்தார்.

இத்துடன் கர்நாடகா விவசாயக் கடன் தள்ளுபடி செய்த 4-வது மாநிலமாகியுள்ளது. உ.பி. பஞ்சாப், மகாராஷ்டிராவை அடுத்து கர்நாடகாவும் பட்டியலில் இணைந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய இயலாது என்று கூறிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து