முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்:ராமேசுவரம்,மண்டபம் பகுதி மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,-  கச்சத்தீவு அருகே  மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம்,மண்டபம் ஆகிய பகுதி மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை விரட்டியடித்தனர்.
  ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 620  படகுகளிலும் அதுபோல மண்டபம் துறைமுகப்பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க  சென்றனர்.இவர்கள்   கச்சத்தீவுக்கும்,தலைமன்னார்க்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு   ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சகாயம்,தெட்சினாமூர்த்தி,சேகர்,சேதுராஜன் ஆகியோர்களின் படகுகளையும், மண்டபம் பகுதியை சேர்ந்த சில மீனவர்களின் படகுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.பின்னர்  கடலில் மீன்பிடிக்க விரித்திருந்த வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். அதுபோல அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் பகுதியை சேர்ந்த துரைசிங்கம் என்பவர்க்கு சொந்தமான படகு மீது ரோந்து கப்பலை வைத்து மோதி சேதப்படுத்தியுள்ளனர். பின்னர்  அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சத்தை ஏற்படுத்தி இப்பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் சென்றதை அறிந்த பாதிக்கப்பட்ட மீனவர்கள்  வெட்டிவிட்ட வலைகளை  சேகரித்துக்கொண்டும் ராமேசுவரம்,மண்டபம் கடலோரப்பகுதியில் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு அந்தந்த பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து சேர்ந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து