எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோயில். எனவே, சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ஊக்கமுடைமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மையுடைமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகள் வாயிலாக நல்ல பெயர் பெறுங்கள். சொக்கத் தங்கத்தைக் காட்டிலும் நல்ல பெயர் பெறுவதே விலை மதிப்பற்றது.
உங்களையே நீங்கள் மதிக்கும் மனஉணர்வைப் பண்படுத்துங்கள். அதுபோன்றே நண்பர்களையும், அதிகாரிகளையும் மதித்து நடங்கள். மற்றவர்கள் நயநாகரிகமும் கனிவும் கலந்த பழகியல் பண்புடன் நடந்து கொள்வதையே மரியாதை என்கிறோம். அது தனி நபர் ஒருவரை இனிமை. கவர்ச்சி, இணக்கம், கனிவு, அமைதி கொண்டவராக அணி செய்கிறது.
உங்களது வெளி நடத்தை வாயிலாக இத்தகைய மதிப்புணர்வையும் காட்டுங்கள். அது பல நண்பர்களைப் பெற்றுத்தரும்: மென்மையினால் உங்களை அணி செய்யும்.
மென்மையான தொனியில் பேசுங்கள். இதனால், சீரிய பண்பாளராகவோ, பண்பட்ட மங்கையாகவோ உங்களையே பயிற்சிக் கொள்கிறீர்கள். குரலில் ஏற்ற இறக்கம், உச்சரிப்பிலே தெளிவு, சீரான தொனி, தெளிவான உச்சரிப்பு ஆகியவை மரியாதைக்குரிய மற்றும் பண்பட்ட மக்களின் அடையாளங்கள்.
மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டிய வேளைகளில் மௌனமாக இருங்கள். மௌனம் பொன் போன்றது: அரியவற்றைச் சாதிப்பதற்கு உதவுகிறது. ‘இடை யறாமல் உண்மையைத் தேடுவதில் ஈடுபட்டிருப்பவர் வாழ்க்கைக்கு மௌனம் இன்றி யமையாதது’ என்கிறார் காந்தியடிகள். நாவடக்கம் மகத்தான கலை; நாகாக்கக் கற்றுக்கொண்டு விட்டால் அது உங்கள் ஆணைப்படி நடக்கும் ; சிக்கல்கள் பலவற்றிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
உங்களின் ஒவ்வொரு அசைவுகளிலும், பாவனைகளிலும் அமைதியும் அருளும் தவழட்டும். எப்போதும் எளிமையும், தன்னடக்கமும் உள்ளவராக இருங்கள். தாழ்வாரத்திலோ முற்றத்திலோ ஓடித் திரிதல் கூடாது. நோக்கமின்றிக் கண்டபடி சோம்பித் திரிவோர் போலத் திரியக் கூடாது. தக்க காரணத்துடன் சென்று வருதல் நன்று. கூச்சல் எழுப்பாதீர். நீங்கள் ஓடிக் குதித்து விளையாடவும், தாண்டித் தாவி ஆடவும் மேசைகள் செய்யப்படவில்லை. அவற்றின் மீது ‘தடதட’ எனத் தட்டுவதும் அழுக்காக்குவதும் செய்யத் தகாதவை!
தாழ்வாரத்தின் வழியாக நடந்து போகும் பொழுது, தக்க காரணம் இருந்தா லன்றி, ஒவ்வொரு வகுப்பறையினையும் முறைத்துப் பார்த்தவாறே செல்லுதல் கூடாது. மற்றவர்கள் செயல்களில் தலையிடத் தேவையில்லை. நாவடக்கத்தைப் போலவே கண்ணடக்கமும் முக்கியம்.
வகுப்புத் தொடங்கப் போவதற்கான அறிகுறியாக, முதல்மணி ஒலித்தவுடன், வகுப்பறைக்கு உள்ளே போய் உட்கார வேண்டும். ஆசிரியர் வருகிறவரை அமைதி யாக இருக்க வேண்டும். கதவருகே ஆசிரியர் வருவது தெரிந்ததும், மரியாதை காட்டும் முறையில் எழுந்து நிற்க வேண்டும். அவர் அமரும் வரையிலோ, உட்காருங்க! எனச் சொல்லும் வரையிலோ சிறிது நேரம் நின்றவாறு காத்திருத்தல் வேண்டும்.
காலம் தாழ்த்தாமல் வகுப்புக்குச் சென்று வருவது நல்ல பழக்கம். காலந் தாழ்த்தாமை போற்றுதலுக்குரிய செயல்முறை: மேலும் அது, காலம் குறித்த நமது அர்ப்பண ஈடுபாட்டு உணர்வைக் காட்டும்: அமைதி, நிம்மதி, சாந்தம், தன்னம் பிக்கை ஆகியன நம்மில் வளர உதவும். அதனைக் கண்டிப்பாகக் கடைபிடித்தோ மென்றால், மற்றவர்களின் மரியாதையைப் பெற்றுத் தருவதோடு நற்பண்பு நல வளர்ச்சிக்கு உதவும்.
காலதாமதமாக வர நேரிட்டுவிட்டால், வகுப்பறைக்கு நேராகச் சென்று, நுழைவாயிலருகே தொடை நடுங்கியவாறு நிற்கத் தேவையில்லை. பவ்வியமாக ஆசிரியரிடம் சென்று, தாமத அனுமதிச் சீட்டைக் கொடுத்து, தெளிவான அடக்கமான குரலில் ‘வணக்கம் ஐயா’ (அ) ‘வணக்கம் அம்மா’ (அ) ‘வணக்கம் ஃபாதர்’ (அ) ‘வணக்கம் சிஸ்டர்’ என பொருத்தமானதைக் குறிப்பிடுக. பின்னர் ‘ஐயா’ மன்னிக்க வேண்டும்: இன்று புகைவண்டி தாமதம் (அ) முன்கூட்டிப் புறப்பட்டு வரும் பேருந்தைத் தவறவிட்டு விட்டேன். இவை போன்ற உண்மைக் காரணங்களுள் ஒன்றினைக் கூறலாம். காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடாது.
வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் அல்லது கேள்விகேட்டு, ஐயம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், ‘ஐயா, அம்மா அருள்கூர்ந்து, இதை நான் தெரிந்து கொள்ளலாமா? ‘எனக்கு இதைப்பற்றி மீண்டும் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?’ போன்ற வினாக் களைப் பவ்வியமான சொற்கள் மூலம் கேட்கலாம்.
வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசக்கூடாது. பேசுவதற்குத் தவிர்க்க இயலாத தேவை ஏற்படுமென்றால், பக்கத்து மாணவர் காதில் கிசு கிசுக்கும் முறையிலோ அல்லது பாவனை மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆசிரியர் உங்களைக் கவனிக்காத நேரம் பார்த்து நெருப்புக் கோழி போலப் புத்தகத்திற்குள் தலையை இழுத்து மறைத்தவாறோ, கள்ளத்தனமாகவோ பேசுதல் கூடாது.
வகுப்பு முடிந்தவுடன், ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரையில், அமைதியாக உங்கள் இடத்திலேயே எழுந்து நின்று காத்திருங்கள். ஆசிரியர் முதலில் வெளியில் செல்லட்டும்: அவருக்கு முந்திச் சென்று வெளியேறு வதற்கு நெருக்கிப் பிடித்துப் போகவேண்டாம்.
பள்ளி அரங்கத்தினுள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளே நுழையும்பொழுதும், வெளியே போகும்பொழுதும் மேற்கூறியவாறு நடந்து கொள்வது நன்று. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முக்கிய பங்கேற்பாளர்கள் முதலில் வெளியே செல்லும் வரையில் காத்திருங்கள்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்கு, மெல்ல கைகளைத் தட்டித் தெரிவித்தால் போதும். முரசு முழக்குவது போலத் தாளகதியில் தட்டிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. மேசை மீது தட்டுவதும், தரைமீது காலடிகள் ஓசை எழுப்புவதும் செய்யக்கூடியது அல்ல. ஆரவாரமும் சண்டித்தனமும், செய்யாதீர்கள்.
ஆசிரியர் ஒருவர் தமிழ்மொழியில் கேட்கும்பொழுது தமிழிலேயே பதில் கூறுங்கள். ஆங்கிலத்தில் பதிலளிப்பது முறையல்ல. ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் தமிழில் பதிலளிக்காமல், ஆங்கிலத்திலேயே பதில் கூறுங்கள். முணுமுணுத்தவாறு பதில் சொல்லிக்கொண்டிருத்தல் கூடாது. தெளிவாகப் பேசு பவரே பண்பட்ட மனிதர்.
எந்தவொரு மொழியையும் புதிதாகப் பேசவோ, எழுதவோ, பயிலும்போது அம்மொழிச் சொற்களின் சரியான அசையழுத்தம், தொனி, உச்சரிப்பு முறை ஆகி யன அனைத்தையும் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பொது நல நோக்கில் சிறுவேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால், உதவ வேண்டும். சான்றாக, சன்னல்களைத் திறந்து வைத்தல், மேசைகளை வேறு இடம் கொண்டு செல்லல், வகுப்பறையைத் துப்புரவு செய்தல் முதலியன. பண்பட்ட முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் முந்திவந்து நின்று பணிசெய்து உதவி செய்வார்கள்.
பள்ளி, விடுதி, நூலகம் ஆகியவற்றின் நெறி முறைகள் அனைத்தையும் மதித்து நடங்கள்.
சுவர்களின் மீதோ, கரும்பலகை மீதோ கண்டதைக் கிறுக்காமல் தவிர்த்து விடுங்கள்.
கசக்கிய குப்பைக் காகிதங்களைத் தரைமீதோ, மண்மீதோ வீசி எறியக்கூடாது. மேசை மீதோ, தரைமீதோ மையைக் கொட்டுவதோ, போனா விலிருந்து உதறி உதிர்ப்பதோ கூடாது. உங்கள் வீட்டுக்குள் எவராவது அவ்வாறு செய்வதைக் காண நேர்ந்தால் கண்டிப்பீர்கள் அல்லவா?
வகுப்பிற்கோ, பள்ளிக்கோ புதிதாக வருபவர்களை, குறிப்பாகப் பெண்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது நாகரீகம் அல்ல. அடக்கமற்ற அச்செயல் உங்களைத் தாழ்த்தும். ஒருவரிடம் நெருங்கிப் பேசும்பொழுது, அவர் வாயருகே நெருக்கமாகச் சென்று பேசாதீர்.
வாய்ச் சவடால் மொழிவதும் செய்யத்தகாத செயல்.
தேர்வுக்குக் குறித்த நேரத்தில் சென்று சேருங்கள்: புத்தகங்களை வகுப்ப றைக்கு வெளியே வையுங்கள்; மற்றவரைப் பார்த்தெழுத முயற்சி செய்வது நேர்மையற்றதும், ஒழுக்ககேடானதுமான செயலுமாகும். வினாத்தாளை வழங்கியதும் கவனமாகப் படியுங்கள். வினாவுக்கேற்ப நேரடி யான விடையை எழுதுங்கள்: நேர்த்தியாக எழுதுங்கள்: இடப்பக்கத்தில் வரைவுக் கோடு வரையுங்கள். இறுதி ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே தேர்வை முடியுங்கள். தாளின் பக்கவரிசை முறையைச் சரிபார்த்துக் கட்டுங்கள். பின்னர் எழுதிய விடை முழுவதையும் விரைவாகச் சரி பார்த்துத் தேவையான இடங்களில் செம்மையாக்கம் செய்யுங்கள்.
கூடுதல் தாள் எழுதுவதற்காக உங்களுக்குத் தேவையென்றால், எழுந்து நின்று காத்திருங்கள்! மேசை மீது தட்டி அழைப்பதும், இருமுவதும், செருமுவதும் ‘உஸ்’ என ஒலி எழுப்பி அழைப்பதும், கால்களைத் தரையில் தேய்த்து ஒலி எழுப்பிக் கவனத்தை ஈர்க்க முனைவதும் இடக்கையால் அலட்சியமாகத் தாளை வாங்குவதும் செய்யத்தகாத அநாகரிகச் செயல்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



