எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவ நிலையங்கள்
சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நடப்பாண்டில், 49 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் 150 கால்நடை மருத்துவ நிலையங்கள் நபார்டு வங்கியின் நிதியுதவிடன் புதிதாகக் கட்டப்படும். நடப்பாண்டில், 93.86 லட்சம் கால்நடைகளுக்கு நோய்த் தொற்றுகளை தடுக்கும் வகையில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பூசிகள் போடப்படும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ்கோடு வெளியில் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்குடன் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் 14 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.
உட்கட்டமைப்பு வசதிகள்
உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதலாக பெறப்படும் பாலை கையாள திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், காஞ்சிபுரம் - திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் குளிர்பதன வசதி, நவீன பாலகம் அமைத்தல், பால் பதப்படுத்தும் இயந்திரங்கள் நிறுவுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்துதல், தீவனக் கிடங்குகள், நெய் நிரப்பும் இயந்திரங்கள், தரக்கட்டுப்பாடு ஆய்வகம், பால் பை நிரப்பும் இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
20,000 பணியாளர்களுக்கு ...
தமிழகத்தில் கிராம அளவில் சுமார் 12,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கிராம அளவில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால்கொள்முதல் செய்யும் பணியுடன், பால் தரப் பரிசோதனை செய்தல், கால்நடை தீவனம் வழங்குதல் போன்ற இதர பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 20,000 பணியாளர்களுக்கு, அச்சங்கங்களின் பால் உற்பத்தி மற்றும் அவை ஈட்டும் இலாபம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவர்களது ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறுவைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து, அவர்களது பணிமூப்பு அடிப்படையில், அனைத்து முதுநிலை பணியாளர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், மாற்று ஏற்பாடாக பணப்பயன்பெறும் மாற்றுத் திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.
ஊதிய உயர்வு
தொடக்க பால் உற்பத்தியாளர்கள்சங்கங்களின் 20,000 பணியாளர்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், அவர்களுக்குமாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதற்கான 5 கோடி ரூபாய் செலவினம் சங்க நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். 2012-ம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் இந்தியாவிலேயே முதலாவது மீன்வளப் பல்கலைக்கழகத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். தற்போது, மீன்வளப்பிரிவில் தேவைப்படும் மனிதவளத் தேவையினைபூர்த்தி செய்திடும் வகையில் நடப்பாண்டில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறு பேரூராட்சியில் அமைந்துள்ள ஓரடியம்புலம் கிராமத்தில் ஒரு புதிய மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவக்கப்படும். தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தின்கீழ் நிறுவப்படும் இந்த புதிய மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடப்பாண்டிலிருந்து 20 மாணவர்கள் மீன்வள இளநிலை பட்டப்படிப்பிற்கு சேர்க்கப்படுவார்கள்.
மீன்வள ஆராய்ச்சி நிலையம்
இந்த மீன்வளக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் 15 ஏக்கர்பரப்பிலும், 50 ஏக்கர் பரப்பளவில் நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்பண்ணைகளும் அமைக்கப்படும். இந்த மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினை அமைப்பதற்கு 28 கோடியே 82 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்படும். சென்னை, இராயபுரத்தில் ஒரு மீன்வளப் பயிற்சி நிலையமும், மீன்வளர்ப்புத் தொழில்நுட்பங்களில் பல்வேறு பயிற்சிகள் வழங்க காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காட்டிலுள்ள மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி மையமும் 13 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
முதுகலைப் பட்டப்படிப்பு
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின், சென்னையிலுள்ள வாணியஞ்சாவடி முதுகலை பட்ட மேற்படிப்பு வளாகத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக ‘மீன்வள வணிக மேலாண்மை’ முதுகலைப் பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் 40 மாணவர்கள் நடப்பாண்டிலிருந்து சேர்க்கப்படுவார்கள். மேலும், மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன்,கடல்சார் உயிர் தொழில்நுட்ப முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு 12 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவை தவிர, இந்தியாவிலேயே முதன்முதலாக ‘மீன்வள மருந்தியலில்’ முதுகலைப் பட்டப்படிப்பும் தொடங்கப்படும். இந்த நிலையத்தில் நவீன நூலகம் , அதி நவீன ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சியினை மேற்கொள்ள உயிரணு மரபியல், மூலக்கூறு உயிரியல், மரபுசங்கிலி தொடர் வேதிவினை, நொதியியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிர்-வேதியியல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இந்த மீன்வள முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கூடுதல் கல்விக் கூட வசதிகள் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
இந்தியாவின் வளர்ச்சியை பரம்பரை சொத்து வரி முறை சிதைத்து விடும்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, பரம்பரை சொத்து வரி முறை இந்தியாவின் பத்தாண்டு கால வளர்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை சாடியுள்ளார்.
-
கேரளாவில் வாக்குப்பதிவின் போது மயங்கி விழுந்து 4 பேர் உயிரிழப்பு
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது 4 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.