எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பணியின் போது வீரமரணம் அடையும் தீயணைப்பு வீரர்களுக்கு காவல்துறைக்கு இணையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தி.மு.க. புகாருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
உறுப்பினர் கேள்வி ...
கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு படை வீரர் உயிரிழந்தார். ஏராளமானவர்கள் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான பிரச்சினையை நேற்ரு சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ. மாதவரம் சுதர்சனம் எழுப்பினார். தீ விபத்தில் காயம் அடைந்த அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் சாதாரண மக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டினார்.
பணி நியமனம் ...
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அவர் கூறியதாவது:-
15.7.2017 அன்று இரவு 11.17 மணியளவில் கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் மூடியுள்ள பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஸ்டேன்லி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 நோயாளர் ஊர்திகள் மற்றும் தனியார் ஊர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்போர் ஏகராஜ் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களில் உயிரிழந்தார். அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இழப்பீட்டு தொகை
மேலும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயும், கருணைத் தொகை 10 லட்சம் ரூபாயும், என மொத்தம் 13 லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்திருந்த தீயணைப்போர் ராஜதுரை மற்றும் லட்சுமணன் ஆகியோரது உறவினர்களின் வேண்டுகோளின்படி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மானியகோரிக்கையின் போது நான் அறிவித்த “எதிர்பாரா மருத்துவ நல நிதி” மூலம் இவர்களுக்கான மருத்துவ செலவு மேற்கொள்ளப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும். கருணைத் தொகை, காவல்துறைக்கு இணையாக, பணியின்போது வீரமரணம் அடைவோருக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாகவும், நிரந்தர ஊனம் அடைவோருக்கு 1 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாகவும், கொடும் தீக்காயம் அடைவோருக்கு 20,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும், 20 விழுக்காட்டிற்கும் குறைவாக தீக்காயம் அடைவோருக்கு 20,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், இந்த நிதியாண்டிலிருந்து உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும் 4 நபர்கள் ...
வெளிக்காயங்களுடன் இயந்திர கம்மியர் ஓட்டி ஜெயபாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று 17.7.2017 அன்று வீடு திரும்பியுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு 30 நபர்கள் கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டு தீக்காயங்களுடன் தீக்காயப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அன்றே, மேலும் 4 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
48 பேருக்கு ...
இதே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 நபர்கள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டும் மற்றும் 2 நபர்கள் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவரையும் சேர்த்து மொத்தம் 48 பேருக்கு இச்சம்பவத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இவர்களில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 5 நபர்கள், தீயணைப்பு படை வீரர்கள் 4 நபர்கள், ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் மற்றும் பொது மக்கள் 38 பேர் ஆவர்.
புகையினால் பாதிப்பு ...
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முகம் மற்றும் மூச்சு குழாய்களில் வெப்பம் மற்றும் புகையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 32 நபர்களில், 12 நபர்கள் மருத்துவர் அனுமதியின்றி, உறவினர்களின் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். மீதமுள்ள 20 நபர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும், 10 நபர்கள் ஸ்டான்லி மருத்துவ மனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
16 நபர்களுக்கு ...
நேற்று (நேற்று முன்தினம்) ஜெயபாலன், தீயணைப்புத்துறை வீரர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ள 39 நபர்களில் 5 நபர்களுக்கு 60 முதல் 82 விழுக்காடு வரை தீக்காயங்கள் உள்ளன, 16 நபர்களுக்கு 40 முதல் 60 விழுக்காடு வரை தீக்காயங்கள் உள்ளது.12 நபர்களுக்கு, 20 முதல் 40 விழுக்காடுவரை தீக்காயங்கள் உள்ளன. மீதமுள்ள 6 நபர்களுக்கு 20 விழுக்காட்டிற்கு குறைவாக தீக்காயங்கள் உள்ளன.
வெளி நோயாளியாக ...
காவல்துறையைச் சேர்ந்தவர்களில் இருவர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். 3 காவல்துறையைச் சேர்ந்தவர்களும், ஊர்க் காவல்படை வீரர் ஒருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து பொதுமக்களும் உறவினர்களின் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிறு தீக்காயங்களுடன் இரண்டு பொதுமக்கள் மருத்துவர் அனுமதியின்றி வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சை பெற்றுவரும் அனைத்து உள் நோயாளிகளுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பேராசிரியர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிசிக்சை உதவி பேராசிரியர்கள் மற்றும் உள்ளிருப்பு மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அனைவரையும் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், 16.7.2017 அன்று காலை 7 மணி முதல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர்,பொது மருத்துவர், அறுவை சிகிக்சை மருத்துவர்,கண் மருத்துவர், எலும்பு சிகிச்சை நிபுணர், மயக்கவியல் நிபுணர், நரம்பு சிகிச்சை நிபுணர், சிறுநீரக சிகிச்சை நிபுணர், குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர், மனநல சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 35 செவிலியர்கள் உள்ளடக்கிய ஒரு சிறப்பு மருத்துவக் குழு ஏற்படுத்தப்பட்டு, இக்குழு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
உயர்தர சிகிச்சை ...
தீக்காயம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முழுமையான உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், தேவையான அனைத்து மருந்துகள், கருவிகள், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம்சாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை நிலைக்கு மாறானது.
தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.