முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மாநிலங்களவையில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் அதிமுக அம்மா அணி  எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கை குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும், உள்துறை அமைச்சகத்தின் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 3-வது நாளான நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதாவின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர்  நரேந்திர மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங்,  சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அதிமுக அம்மா அணி உறுப்பினர்கள், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து