எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசினார், அப்போது அவர் பேசியதாவது:-
கத்தி முனையை விட பேனா முனை வலுவானது என்றார் பேரறிஞர் அண்ணா, பேனா முனையால் ஏட்டை நிரப்பி நாட்டை திருத்தும் நற்பணியாற்றும் பத்திரிகையாளர்கள் நலம்பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.5000-லிருந்து ரூ.8000-ஆகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2500-லிருந்து ரூ.4750- ஆகவும் 3 முறை உயர்த்தி நலிவுற்ற பத்திரிகையாளர் நலம் பெற வழிவகுத்தவர் ஜெயலலிதா.
முதல்வர் எடப்பாடி.பழனிசாமி தலைமையில் செயல்படும் இந்த அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத்தினை ரூ.8000-லிருந்து ரூ.10,000- ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.4750-லிருந்து ரூ.5000- ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தையும், குடும்ப ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கு துறை சார்பிலும், பத்திரிகையாளர் சார்பிலூம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்திரிகையாளர் நலன் கருதி சென்னை தலைமைச் செயலகத்தில் ரூ.25.00 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய செய்தியாளர் கூடம் 3.8.2011 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி பிரிவினருக்கு தேவையான இருக்கைவசதி, பிற செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் தொலைக்காட்சி வசதி, கணினி, இண்டர்நெட், வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் அவர்களுடைய மின்னணு சாதனங்களுக்கான பாதுகாப்பு பெட்டக வசதி ஆகிய அனைத்து வசதிகளும் செய்தியாளர்கள் நலன் மற்றும் அவர்களது உடமைகளுக்கு பாதுகாப்பு கருதி அம்மாவின் அரசால் செய்து தரப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-05-2025
11 May 2025 -
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.