முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தாலுகாவில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்கள்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்:

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் தாலுகாவில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கென பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் ஜூலை 23ம் தேதியான நேற்று   புதியவாக்காளர் சேர்த்தல்,பெயரை நீக்குதல்,திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்திட தமிழகம் முழுவதிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள அனைத்துப் பள்ளி  வாக்குச்சாவடிகளிலும் நேற்று இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று நடத்தப்பட்ட இந்த வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் ஏராளமானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கென விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்தனர்.அதே போல் திருத்தம் செய்திட வேண்டியும் ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் இதற்கென நியமிக்கப்பட்டிருந்த அலுவலர்களிடம் தங்களது மனுக்களை கொடுத்தார்கள். இந்நிலையில் நேற்று காலை திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.அப்போது திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் உடனிருந்தார்.அப்போது வாக்காளர் சேர்ப்பு மையங்களில் உள்ள அலுவலர்களிடமும் வாக்காளர்களுக்கு உதவிடும் பணியிலிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளிடமும் வாக்காளர்கள் சேர்க்கை விபரங்கள் மற்றும் திருத்தப்படுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.
அப்போது முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் வக்கீல் தமிழ்ச்செல்வம், திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றஇணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,திருமங்கலம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சதீஸ்சண்முகம் கட்சி நிர்வாகிகள் எஸ்.பி.எஸ்.ராஜா,சிவன்காளை,பழனிச்சாமி,ஆனந்த்,கபிகாசிமாயன்,வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,பாண்டியராஜ்,சிவனாண்டி,சாமிநாதன் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து