முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட தொழிலாளர் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண ரஜினிகாந்த் மன்சூர் அலிகான் வேண்டுகோள்

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, திரைப்பட தொழிலாளர்கள் பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று பெப்சி ஊழியர்களை சந்தித்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மன்சூர் அலிகான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

‘பெப்சி’ தொழிலாளர்களுடன் பணியாற்றுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து உள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 40 சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பும் நடக்கவில்லை.

வேலை நிறுத்தத்தால் தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் ஆகிய இருதரப்புக்குமே பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இந்த பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதில் கமல்ஹாசனுடன் ஏற்கனவே இதுகுறித்து பேசியதாகவும், கமல் சில ஆலோசனைகளை கூறியதாகவும் செல்வமணி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பெப்சி ஊழியர்கள் இன்று காலை ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பெப்சி ஊழியர்களுடனான சந்திப்புக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"எனக்கு பிடிக்காத சில சொற்களில் "வேலைநிறுத்தம்" என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெபச்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்"

இவ்வாறு ரஜினி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான்

பெப்சி’ தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தமிழ் திரையுலகில் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“ஒவ்வொருவரும் இன்னொருவரை சார்ந்து இருப்பதுதான், சினிமா. யாரோ ஒரு தொழிலாளி செய்த தவறுக்காக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் அனைத்து துறைகளிலும் வேலை செய்கிறார்கள். இது, சினிமாவிலும் தொடர்ந்தால் எப்படி? ஏற்கனவே பணச் செல்லாமை, ஜி.எஸ்.டி, வறட்சி, மழையின்மை, நதி நீர் கிடைக்காமல் விவசாயிகள், நெசவாளிகள், சிறு குறு தொழிலாளர்கள் என தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தொழில்நுட்பம், கடுமையான உடல் உழைப்பை கொடுத்து ஹாலிவுட் தரத்தை மிஞ்சுகிற அளவுக்கு சண்டை காட்சி நிபுணர்கள், ஆர்ட் டைரக்டர்கள் மற்றும் தொழிலாளிகளை கொண்டது, பெப்சி அமைப்பு. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. வேலை நிறுத்தம் தொடர வேண்டாம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து