முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி அருகே பெண் சடலம் கொலையா என போலீசார் விசாரனை

புதன்கிழமை, 9 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னு£ர் டோல் கேட் அருகே உள்ள வயல் வெளியில் உடலில் காயங்களுடன் பெண் சடலம் கிடப்பதாக க.விலக்கு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறை உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு பீரேத பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்பு போலீசார் விசாரனையில் மர்மமாக இறந்த பெண் குன்னு£ரை சேர்ந்த அழகுமீனாள் வயது 24 என்பது தெரியவந்தது.இவருக்கு பெரியகுளத்தை சேர்ந்த சௌந்திரபாண்டி என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 4வயதில் பிரதீப் என்ற ஆண்குழந்தை உள்ளது.இந்நிலையில் அழகுமீனாளுக்கும் அவரது கனவருக்கும் ஏற்ப்பட்ட தகராரில் அழகுமீனாள் கணவரை பிரிந்து தனது தாயார் பாண்டியம்மாள் வீட்டில் கடந்த 6 மாதமாக தனது குழந்தையுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அழகுமீனாளுக்கு போன் வந்துள்ளது அந்த போனில் பேசிக்கொண்டே வெளில் சென்ற அழகுமீனாள் இரவு வீட்டிற்க்கு திரும்பவில்லை இதனையடுத்து இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் நேற்று காலை குன்னு£ர் அருகில் உள்ள விவசாய நிலத்தில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.இது குறித்து அவரது தாயார் பாண்டியம்மாள் புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொலையா என விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து