எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 85 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
நேற்றுடன் நிறைவு
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 518 பொறியியல் கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 339 இடங்களை நிரப்புவதற்கு நடந்த கலந்தாய்வில் பாதி இடங்கள் (50 சதவிதம்) மட்டுமே நிரம்பியுள்ளன.
ஆர்வம் குறைவு...
நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 963 பேர் அழைக்கப்பட்டதில் 83,562 பேர் மட்டும் கல்லூரிகளை தேர்வு செய்து ஒதுக்கீட்டு இடங்களை பெற்றனர். கலந்தாய்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதால் ‘ஆப் சென்ட்’ ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
90 ஆயிரம் இடங்கள் ....
கடந்த காலங்களில் ஒப்பிடும்போது இந்த வருடம் ஆப்சென்ட் விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வரை 83,562 இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. 91,894 பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன. நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த கலந்தாய்வில் 3 ஆயிரம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும் கூட 89 ஆயிரம் முதல் 90 ஆயிரம் இடங்கள் வரை காலியாக வாய்ப்பு உள்ளது.
மோகம் குறைந்து ...
கடந்த 2014-ம் ஆண்டு ஒரு லட்சத்து 27 ஆயிரம் இடங்கள் நிரம்பின. 2013-ல் ஒரு லட்சத்து 24 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். இப்படி படிப்படியாக குறைந்து இந்த வருடம் மொத்தம் 86 ஆயிரம் இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்பு மீது இருந்த மோகம் குறைந்து தற்போது கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு மற்றும தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்ட வகுப்புகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மெக்கானிக்கல் பிரிவில்...
இந்த வருடம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப் பிரிவில்தான் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 2-வது இடத்திலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது. ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் 2141 இடங்கள் இருந்த போதிலும் 1013 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆயிரம் இடங்களுக்கு மேலாக காலியாக கிடக்கின்றன. அதே நிலையில்தான் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பாடப்பிரிவும் உள்ளது.
துணை கலந்தாய்வு ...
சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 25,257 இடங்கள் இருந்த போதிலும் 8 ஆயிரம் இடங்கள்தான் நிரம்பியுள்ளன. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (இ.இ.இ.) பாடப்பிரிவில் 22,519 இடங்கள் இருந்தாலும் 9,749 இடங்கள்தான் நிரம்பின. இந்த வருடம் முதல் பட்டதாரி குடும்பத்தை சேர்ந்த 44 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு 17-ந் தேதி நடக்கிறது. அதில் 1000 இடங்கள் நிரம்பினாலும் மீதமுள்ள இடங்கள் காலியாக கிடக்கும். அதனைத் தொடர்ந்து 18 ம் தேதி ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களில் ஆதிதிராவிடர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
மூட வேண்டிய நிலைக்கு...
ஆண்டுக்கு ஆண்டு காலி இடங்கள் அதிகரித்து வருவதால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கல்லூரி எதுவென்று ஆய்வு செய்து அதில் சேரவே மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் எதிர்காலத்தில் சிறந்த கல்லூரிகள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி