முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி மாத கழிவு நாளையட்டி பக்தர்கள் அழகர்கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம்.

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில், - பிரசித்திபெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி மாத ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து தினமும் ப க்தர்கள் கோவிலு க்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். இதில் ஏற்கனவே ஆடி அமாவாசை, கொடியேற்றம், தேரோட்டம், சந்தனம் சாத்துபடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள்  நடந்து முடிந்தன. இருப்பினும் ஆவணி மாதம் பிற க்க இன்னும் 2 நாட்களே உள்ளன. இதைதொடர்ந்து நேற்று விடுமுறை நாள் என்பதாலும், ஆடி கழிவு என்பதையட்டியும் இ க்கோவிலில் காலையிலிருந்து மாலை வரை ஆயிர க்கண க்கான ப க்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் அழகர்மலை உச்சியில் உள்ள நு£புர கங்கையில் ஏராளமான ப க்தர்கள் புனித நீராடி அங்குள்ள ரா க்காயி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியையும் நெய்விள க்கேற்றி தரிசனம் செய்தனர். அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலிலும் ப க்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து