முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரீம் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

அலங்காநல்லூர்.- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த பெரியஊர்சேரி அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ட்ரீம் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினமும், மன்றத்தின் ஆன்டுவிழாவும் மற்றும் 10, 12 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது.  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்திசேகரன் தலைமை தாங்கினார். பயிற்சி பள்ளி இயக்குனர் பூமிநாதன், போலிஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், தலைமை ஆசிரியை பேன்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மன்ற பொறுப்பாளர் ஜோதி முருகன் வரவேற்றார். விழாவில் டேவிட் தாமஸ், ஆரோக்கியராஜ், விளையாட்டு ஆசிரியர் காட்வின் முன்னாள் கவுன்சிலர் ராஜபிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் வட்டார அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அப்துல் கலாம் பற்றிய பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து