முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவின் ரக்கா பகுதியில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 42 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

ரக்கா: சிரியாவின் ரக்கா பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 42 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட செய்தியில், சிரியாவில் ஐஎஸ் ஆதிக்கம் உள்ள பகுதியான ரக்காவில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 42 பேர் பலியாகினர். பலியானவர்களில் 19 பேர் சிறுவர் சிறுமியர், 12 பேர் பெண்கள் ஆவர்.” என்று கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனங்கள் தெரிவித்த நிலையிலும் தொடர்ந்து அமெரிக்கா சிரியாவில் வான் வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து